பருப்புருண்டை தயிர்க்குழம்பு
**************************************
தேவை :
----------------
துவரம் பருப்பு, கடலைப் பருப்பு-- தலா 1/2 கப்,
புளி ---- சின்ன எலுமிச்சை அளவு,
பச்சை மிளகாய் ---- 4,
சீரகம் --- 1 டீஸ்பூன்,
இஞ்சி ---- சின்ன துண்டு,
மிளகாய்த் தூள் ---- 1/2 டீஸ்பூன்,
மல்லித்தூள் ---- 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் -------- 1/2 டீஸ்பூன்,
சின்ன வெங்காயம் ---- 1கைப்பிடி,
பூண்டு பற்கள் ---- 4,
தயிர் ------- 2 டேபிள்ஸ்பூன்,
உப்பு, எண்ணெய் ---- தேவைக்கு,
தாளிக்க : கடுகு, உளுந்தம்பருப்பு,
கறிவேப்பிலை.
செய்முறை :
---------------------
துவரம் பருப்பு, கடலைப்பருப்பை ஒன்றாக நீரில் போட்டு, குறைந்தது ஒரு மணிநேரம் ஊறியபின், முற்றுமாக நீர் வடித்து, பச்சைமிளகாய் ,சீரகம், இஞ்சி, உப்பு ( விரும்பினால் சிறிது பெருங்காயமும்) சேர்த்து நீர் விடாமல் சற்று கொரகொரப்பாக அரைத்து எடுத்து, மிகமெல்லியதாக நறுக்கிய பூண்டு பற்கள், சிறிது மல்லித்தழை ( விரும்பினால் இரண்டு சின்ன வெங்காயம் மெலிதாக நறுக்கிப்போட்டு )சேர்த்துப் பிசைந்து, சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் காயவைத்து, தாளிக்கும் பொருட்கள் தாளித்து,வெங்காயம், தக்காளித் துண்டுகள், பச்சைமிளகாய் சேர்த்து நன்கு வதங்கியபின் புளி கரைத்த நீர் விட்டு மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், உப்பு சேர்த்து போதுமான நீர் விட்டு குழம்பைச் சற்று நீர்க்கக் கொதிக்க விடவும். குழம்பு நல்ல மணமாக ,நல்ல நிறத்துடன் வரும்போது, பருப்புருண்டைகளை நான்கு நான்காகப் போட்டு, கரண்டியால் கிண்டாமல்,உருண்டைகள் உடைந்து விடாதபடி, இரு பிடிகளையும் துணியால் பிடித்து ஆட்டி விட்டு, உருண்டைகள் நன்கு வெந்ததும், தயிர் சேர்த்துக் கொதித்ததும் இறக்கவும்.
மிகுந்த சுவையும், சத்துக்களும் நிறைந்த இந்தக் குழம்பை சூடான சாதத்தோடு பிசைந்து ருசிக்கலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக