லேபிள்கள்
- இனிப்பு (1)
- இனிப்பு வகை (1)
- இனிப்பு வகைகள் (23)
- இனிப்புஃ (1)
- காரம் (1)
- கிரேவி (1)
- குழம்பு வகை (2)
- சட்னி வகை (1)
- பொங்கல் வகை (1)
- mixed rice (4)
- Rice (1)
ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2020
சேனைக்கிழங்கு குழம்பு
கம்பு புட்டு
கம்பு புட்டு
தேவை:
உமி நீக்கிய கம்பு ------ 1கப்,
பொடித்த வெல்லம் ------ 3/4 கப்,
வெள்ளை எள்ளு ------ 1/2 கப்,
தேங்காய்ப் பூ ------- 2 டேபிள்ஸ்பூன்,
ஏலக்காய் ------- 6 ,
நெய் -------- 2 டேபிள்ஸ்பூன்.
செய்முறை :
கம்பை வெறும் வாணலியில் வாசம் வர சிவக்க வறுத்து, மிக்ஸியில் நைசாகப் பொடித்தபின், உப்பு கலந்த நீர் சேர்த்து, உதிரியாகக் கட்டிகளின்றிப் பிசிறிப் பிசைந்து மூடி வைக்கவும். குறைந்தது அரை மணிக்குப் பின் ஆவியில் வேகவிடவும். வெல்லத்தைக் கொதிக்கும் நீரில் கரைத்து வடிகட்டி தேங்காய்ப் பூ சேர்த்து பாகு வைக்கவும். வெந்த புட்டை வாயகன்ற பாத்திரத்தில் கொட்டி, ஏலப்பொடி, முன்னதாக வறுத்து ஒன்றிரண்டாகப் பொடித்த எள்ளு, நெய் சேர்த்து கலக்கி வெல்லப்பாகையும் சேர்த்து நன்கு கிளறி விடவும். அடுப்பில் வைக்க வேண்டாம்.
இந்த புட்டு மிகவும் சுவையானது. சத்தானது. செய்வதற்கு சுலபமானது.
தினை கஞ்சி
தினை கஞ்சி
சனி, 29 ஆகஸ்ட், 2020
ராகி கீரை வடை
வெள்ளி, 28 ஆகஸ்ட், 2020
காட்டு யானம் கஞ்சி
காட்டு யானம் கஞ்சி
வியாழன், 27 ஆகஸ்ட், 2020
நெய் மாலாடு
நெய் மாலாடு
செவ்வாய், 25 ஆகஸ்ட், 2020
கவுனி கஞ்சி
கவுனி கஞ்சி
*******************
திங்கள், 24 ஆகஸ்ட், 2020
சுண்டைக்காய் காரக் குழம்பு
சுண்டைக்காய் காரக் குழம்பு
*************************************
தேவை:
ஆய்ந்த சுண்டைக்காய் - 2 கப்,
சின்ன வெங்காயம் - 1 கைப்பிடி,
பூண்டு பற்கள் ------ 6,
தக்காளி ------ 2,
புளி ----- சின்ன எலுமிச்சை அளவு
மிளகாய்த்தூள் --- 3/4. டீஸ்பூன்,
மல்லித்தூள் ------ 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் ---- 1/2 டீஸ்பூன்,
கெட்டித்தயிர் ------ 1 டேபிள்ஸ்பூன்,
உப்பு,எண்ணெய் --- தேவைக்கு,
தாளிக்க: கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை
செய்முறை :
நன்கு அலசி நீர் வடித்த சுண்டைக்காயை மஞ்சள் தூள் ,உப்பு சேர்த்து எண்ணெய் விட்டு வதக்கி வைக்கவும். உரித்த வெங்காயம், பூண்டு பற்கள் தக்காளி துண்டுகளை மிக்ஸி ஜாரில் நீர் சேர்க்காமல் ஒன்றிரண்டாகச் சுற்றி எடுத்து, வாணலியில் எண்ணெய் காயவைத்து, கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, பொடித்த கலவை சேர்த்து நன்கு வாசம் வர வதக்கி சுருளும் போது வதங்கிய சுண்டைக்காயோடு சேர்த்து புளி நீர் விட்டு மிளகாய்த்தூள் ,மல்லித்தூள், 1/2 ஸ்பூன் சீரகத்தூள்,மல்லித்தழை ,போதுமான நீர் சேர்த்துக் கொதிக்கும் போது, ஒரு டீஸ்பூன் வெல்லத்தூள், தயிர் சேர்த்து, குழம்பு நல்ல நிறமும், மணமுமாகத் திக்காகி, எண்ணெய் பிரியும் போது இறக்கி சூடான சாதத்தோடு பிசைந்து சாப்பிட மிகுந்த சுவையாக இருக்கும்.
வித்தியாசமான பக்குவத்தில் அசத்தும் காரக்குழம்பு.