சனி, 14 டிசம்பர், 2013

முட்டைகுழம்பு

முட்டைகுழம்பு 



தேவையானவை:

கோழி முட்டை -4,  பெரிய வெங்காயம் -1, பூண்டு - 6பல் ,

தக்காளி  -2,புளி - சிறிது , மிளகாய்ப்பொடி -1 டீஸ்பூன் ,

மல்லிப்பொடி  1 டேபிள் ஸ்பூன் ,மஞ்சள்பொடி  1/2 டீஸ்பூன் 

சீரகப்பொடி 1/2 டீஸ்பூன்  உப்பு .  எண்ணெய்   -தேவைக்கு 

தேங்காய்ப்பூ - 2டேபிள் ஸ்பூன் , மல்லி.  புதினாத் தழை - சிறிது ,

தாளிக்க  -பட்டை - சின்ன துண்டு  ஏலக்காய் . கிராம்பு - தலா 2.

செய்முறை ;

    வாணலியில்   எண்ணெய்   காயவைத்து  தாளிக்கும்  பொருட்கள்   தாளித்து  பொடியாக 

நறுக்கிய தக்காளி , வெங்காயம்   சேர்த்து  வதக்கியபின்   புளி கரைத்த  நீர் .மஞ்சள் ,மிளகாய் , 
மல்லி , சீரகப் பொடிகள் , உப்பு ,சேர்த்துப்  போதுமான  நீர்விட்டு  கிளறிக்  குழம்பாகக்  கொதிக்க 
 விடவும்.குழம்பு  சற்று   நீர்க்க  இருப்பது  முக்கியம் . குழம்பு   முதிர்ந்த  நிலைக்கு  வரும்போது  தேங்காய் விழுது  சேர்த்துக்  கொதித்தபின்  அடுப்பை   மிகவும்  குறைத்து வைக்கவும்.
                குழம்பு   கொதிநிலை  தணிந்ததும்  வாணலிக்கு  மேலாக  முட்டையைப்   படுக்கை வாக்கில் தூக்கிப்  பிடித்து  கத்தியினால்  முட்டையின்  நடுவில்  இரண்டாக  உடைத்து  விடவும் .இப்படியே  மற்ற முட்டைகளையும்  இடைவெளி   விட்டு  விட்டு   உடைத்து  விடவும் . வெண்கரு க்கள்  சற்று  கெட்டியானதும் அடுப்பைத்  தூண்டிவிடவும். மஞ்சள் கருக்களும்  வேக ஆரம்பிக்கும்போது குழம்பைக்  கரண்டியால்  கிளறாமல் , வாணலியின்  இரு  கைபிடிகளையும்  துணியால்  பிடித்து  லேசாக  ஆட்டிவியவும் .மஞ்சள் , வெள்ளை கருக்கள்  நன்கு  வெந்ததும்  குழம்பை  இறக்கி   மல்லித்தழைத்  தூவிப்  பரிமாறவும்.

              இந்தக்  குழம்பை  சாதத்தில்   பிசைந்து  சாப்பிட  சுவையாக  இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக