லேபிள்கள்
- இனிப்பு (1)
- இனிப்பு வகை (1)
- இனிப்பு வகைகள் (23)
- இனிப்புஃ (1)
- காரம் (1)
- கிரேவி (1)
- குழம்பு வகை (2)
- சட்னி வகை (1)
- பொங்கல் வகை (1)
- mixed rice (4)
- Rice (1)
செவ்வாய், 6 அக்டோபர், 2020
தால் கிரேவி
திங்கள், 5 அக்டோபர், 2020
பாதாம் அல்வா
ஞாயிறு, 4 அக்டோபர், 2020
பருப்புருண்டை தயிர்க் குழம்பு
பருப்புருண்டை தயிர்க்குழம்பு
**************************************
சனி, 3 அக்டோபர், 2020
கொண்டைக் கடலை காரக்குழம்பு
கொண்டைக்கடலை காரக்குழம்பு
**********************************
திங்கள், 21 செப்டம்பர், 2020
கத்தரிக்காய் தயிர்க் குழம்பு
கத்தரிக்காய் தயிர்க் குழம்பு
***************************
தேவை :
செய்முறை :
வியாழன், 17 செப்டம்பர், 2020
குதிரைவாலி பாயாசம்
++++++++++++++++++++++
தேவை
***********
குதிரைவாலி அரிசி ---- 1/2 கப்,
பாசிப்பருப்பு ----- 1/4 கப்,
சர்க்கரை ----- 1 கப்,
பால் -------- 2 கப்,
திராட்சை, முந்திரி ------ தலா 20 கிராம்,
ஏலக்காய் ------- 6
நெய் ------- 50 கிராம்,
கடலைமாவு -------- 1 டேபிள்ஸ்பூன்.
செய்முறை
*****************
குதிரைவாலி, பாசிப்பருப்பை ஒன்றாக சிறிது நெய் சேர்த்து வறுத்து, 1 கப் பால், இரண்டு கப் நீர் சேர்த்து நன்கு குழைந்து கரைந்ததும் சர்க்கரை சேர்த்து, மீதி பாலையும் ஊற்றி ஏலப்பொடி போட்டு, கடலைமாவை நெய் சேர்த்து தளர்ச்சியாக. வாசம் வர வறுத்து பாயாசத்தில் சேர்த்து, திராட்சை முந்திரி நெய்யில் வறுத்து போட்டு இறக்கவும்.
திங்கள், 14 செப்டம்பர், 2020
எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு
எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு
*************************************************************************
தேவை :
செய்முறை :
வியாழன், 10 செப்டம்பர், 2020
வடைகறி
வடைகறி **********
தேவை :------------
கடலைப்பருப்பு ----- 1 கப், சோம்பு ---- 1டீஸ்பூன், பச்சைமிளகாய் ---- 4 ,
இஞ்சி - சின்ன துண்டு, பெரிய வெங்காயம் ---- 1 , தக்காளி --- 1,
புதினா, மல்லி --- தலா சிறிது. எண்ணெய், உப்பு --- தேவைக்கு.
செய்முறை :
--------------------
கடலைப் பருப்பை ஒரு மணி நேரம் ஊறவிட்டு நீர் வடித்து, பச்சை மிளகாய், இஞ்சி , சோம்பு, உப்பு சேர்த்து, தேவைப்பட்டால் மட்டுமே சிறிது நீர் தெளித்து, ரொம்ப கொரகொரப்பாகவோ, அல்லது மிகவும் நைசாகவோ இல்லாமல் ரவை போல அரைத்த பின், சிறிது மல்லி, புதினா சேர்த்து சுற்றி எடுத்து மெலிதாக நறுக்கிய வெங்காயம் கொஞ்சமாகப் போட்டுப் பிசைந்து, காய்ந்த எண்ணெயில் வடைகளாக, மெலிதாக இல்லாமல் சற்று மொத்தமாகத் தட்டிப் போட்டு நன்கு வேகவிட்டு எடுக்கவும். முறுகலாகக் கூடாது. ஏனெனில் முறுகிய வடைகள் குழம்பை வாங்குவது கடினம். அதே சமயம் வேக்காடு போதுமான அளவு இல்லையெனில் வடைகள் குழம்பில் சிதைந்து விடும்.
வடைகளை மூன்று நான்காக விண்டு வைத்துக் கொள்ளுங்கள்.
இப்போ குழம்புக்காக ,வாணலியில் எண்ணெய் காயவைத்து, கடுகு ,உளுந்தம் பருப்பு ( அல்லது பட்டை கிராம்பு) , கறிவேப்பிலை தாளித்து, பொடியாக நறுக்கிய. வெங்காயம், தக்காளி இரண்டு பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கி, நீர் விட்டு உப்பு, மஞ்சள் பொடி 1/4 டீஸ்பூன் ,மிளகாய்ப்பொடி , மல்லிப்பொடி, சீரகப்பொடி தலா 1/2 டீஸ்பூன் சேர்த்துக் கொதிக்க விடவும். விரும்பினால் சிறிது புளி நீர் விடலாம்.
( வடைக்கு அரைத்த மாவையே சிறிது வைத்திருந்து, நீர் விட்டுக் கரைத்து விட்டாலும் குழம்பு திக்காக வரும். ஏனென்றால் தேங்காய் சேர்ப்பதில்லை.தேங்காய் வடைகறியின் பக்குவத்தையும், சுவையையும் குறைக்கிறது என்பது என் கருத்து மற்றும் அனுபவம் .)
குழம்பு பச்சை வாசனை மறைந்து நல்ல மணம் வரும் போது, தேவைப்பட்டால் நீர் சேர்த்து குழம்பை லூசாக்கிக் கொதித்ததும், வடைகளைச் சேர்க்கவும். வடை சேர்த்து சில நிமிடங்கள் கொதித்த பின்னர் குழம்பும், வடைகளும் சுவையையும், மணத்தையும் ஒன்றுக்கொன்று பரிமாறிக் கொள்ளும் போதுதான் வடைகறி முழுமையான பக்குவத்துக்கு வரும். இறக்கும் போது சற்று தளர்ச்சியாக இறக்கினால் ,
வடைகள் குழம்பை உறிஞ்சி, ரொம்ப இறுகிவிடாமல் சாப்பிட சுவையாக. இருக்கும்.
தஹி கடி
தஹி கடி *************
தேவை :
கடலை மாவு ---- 1 டேபிள்ஸ்பூன், பூண்டு பற்கள் ---- 4,
பெரிய வெங்காயம் -- 1, தக்காளி -- 1,மல்லித்தழை - சிறிது,
தயிர் - 1 கப், மிளகாய்த்தூள் , மல்லித்தூள், சீரகத்தூள் ---
தலா ---- 1/2 டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு ----- தேவைக்கு :
செய் முறை :
கடலை மாவை வெறும் வாணலியில் வறுத்தெடுக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம் ,தக்காளி, பூண்டு மல்லித்தழை சேர்த்து வதக்கவும். பச்சைமிளகாயை கீறிப் போட்டு எல்லாம் வதங்கி தொக்கு போல ஆனதும் , மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்துக் கடலை மாவுடன் நீர் சேர்த்து சற்று நீர்க்கக் கரைத்து ஊற்றி நன்கு கொதித்து, பச்சை வாசனை நீங்கி ,குழம்பு நல்ல வாசனையோடு திரண்டதும், தயிர் சேர்த்து கிளறி, பொங்கியதும் இறக்கவும்.
விரும்பினால் காய்கள் சேர்த்தும் செய்யலாம். போண்டா பொரித்து கொதித்து இறக்கியதும் போடலாம் . இது வட இந்தியாவின் பக்குவத்தில் மோர்க்குழம்பு. சாப்பாட்டில் பிசைந்து சாப்பிடலாம். இட்லி, தோசை, பொங்கல், வடை போன்றவற்றுக்குத் தொட்டுக் கொள்ளலாம்.
திங்கள், 7 செப்டம்பர், 2020
கவுனி தித்திப்பு பொங்கல்
கவுனி தித்திப்பு பொங்கல்
*********************************************************
ஞாயிறு, 6 செப்டம்பர், 2020
மாப்பிள்ளை சம்பா கிச்சடி
மாப்பிள்ளை சம்பா கிச்சடி
தேவை :
மாப்பிள்ளை சம்பா (சிகப்பு) அரிசி ---- 1 கப் ,
பீட்ரூட், கேரட், பீன்ஸ், குடமிளகாய், பச்சைப்பட்டாணி போன்ற காய்கள் ---- தலா சிறிது (எல்லாமாக 200 கிராம் அளவில்) தக்காளி -- 1 , பெரிய வெங்காயம் -சின்னதாக 1, பச்சை மிளகாய் --- 3 ,மல்லி, புதினா - -தலா சிறிது,
எண்ணெய், உப்பு, கடுகு, உளுந்தம் பருப்பு - தேவைக்கு,
நெய் - 1 டேபிள்ஸ்பூன். -----------------------------------------------
செய்முறை --------------------- மாப்பிளை சம்பா அரிசியை வெறும் வாணலியில் வறுத்து, மிக்ஸியில் ஒன்றிரண்டாகப் பொடித்து, 3 1/2 கப் நீர் சேர்த்து குக்கரில் போட்டு 1 மணிநேரம் ஊறியபின் சிறிது உப்பு போட்டுக் கிளறி அடுப்பில் வைத்து மூடி வெயிட் போட்டு ஒரு பிரஷர் வந்ததும், அடுப்பைக் குறைத்து, மூன்று நிமிடங்கள் பொலிய விட்டு அடுப்பை அணைக்கவும். குக்கரில் அரிசி வெந்து கொண்டிருக்கும் போதே இன்னொரு பர்னரில் வாணலியில் எண்ணெய் காயவைத்து கடுகு,உளுந்தம் பருப்பு தாளித்து, பச்சை மிளகாய், தக்காளித் துண்டுகள், மெலிதாக நறுக்கிய வெங்காயம், விரும்பினால் 1 டீஸ்பூன் இஞ்சித் துருவல் சேர்த்து வதக்கி ,புதினா , மல்லி சேர்த்து நன்கு பொன்னிறமாக வதங்கியதும் துண்டுகளாக நறுக்கிய காய்கறிகள் சேர்த்துப் புரட்டி நீரும் உப்பும் சேர்த்து வெந்து நீர் வற்றியதும், குக்கரில் வெந்திருக்கும் அரிசிக் கலவையைச் சேர்த்து நெய்விட்டு நன்கு கிளறி பொலபொலப்பாக இறக்கவும்.
மிகச் சிறப்பான, சத்தும், சுவையும் நிறைய காலை மற்றும் இரவு நேர உணவு. அனைவருக்கும் ஏற்ற நார்ச்சத்து, புரதம், தாதுப் பொருட்கள் நிரம்பியது. சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் உகந்தது.
செவ்வாய், 1 செப்டம்பர், 2020
கறிவடாம் குழம்பு
ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2020
சேனைக்கிழங்கு குழம்பு
சேனைக்கிழங்கு குழம்பு +++++++++++++++++++++++++++ தேவை :
செய்முறை :
கம்பு புட்டு
கம்பு புட்டு
தேவை:
உமி நீக்கிய கம்பு ------ 1கப்,
பொடித்த வெல்லம் ------ 3/4 கப்,
வெள்ளை எள்ளு ------ 1/2 கப்,
தேங்காய்ப் பூ ------- 2 டேபிள்ஸ்பூன்,
ஏலக்காய் ------- 6 ,
நெய் -------- 2 டேபிள்ஸ்பூன்.
செய்முறை :
கம்பை வெறும் வாணலியில் வாசம் வர சிவக்க வறுத்து, மிக்ஸியில் நைசாகப் பொடித்தபின், உப்பு கலந்த நீர் சேர்த்து, உதிரியாகக் கட்டிகளின்றிப் பிசிறிப் பிசைந்து மூடி வைக்கவும். குறைந்தது அரை மணிக்குப் பின் ஆவியில் வேகவிடவும். வெல்லத்தைக் கொதிக்கும் நீரில் கரைத்து வடிகட்டி தேங்காய்ப் பூ சேர்த்து பாகு வைக்கவும். வெந்த புட்டை வாயகன்ற பாத்திரத்தில் கொட்டி, ஏலப்பொடி, முன்னதாக வறுத்து ஒன்றிரண்டாகப் பொடித்த எள்ளு, நெய் சேர்த்து கலக்கி வெல்லப்பாகையும் சேர்த்து நன்கு கிளறி விடவும். அடுப்பில் வைக்க வேண்டாம்.
இந்த புட்டு மிகவும் சுவையானது. சத்தானது. செய்வதற்கு சுலபமானது.
தினை கஞ்சி
தினை கஞ்சி
சனி, 29 ஆகஸ்ட், 2020
ராகி கீரை வடை
வெள்ளி, 28 ஆகஸ்ட், 2020
காட்டு யானம் கஞ்சி
காட்டு யானம் கஞ்சி
வியாழன், 27 ஆகஸ்ட், 2020
நெய் மாலாடு
நெய் மாலாடு
செவ்வாய், 25 ஆகஸ்ட், 2020
கவுனி கஞ்சி
கவுனி கஞ்சி
*******************
திங்கள், 24 ஆகஸ்ட், 2020
சுண்டைக்காய் காரக் குழம்பு
சுண்டைக்காய் காரக் குழம்பு
*************************************
தேவை:
ஆய்ந்த சுண்டைக்காய் - 2 கப்,
சின்ன வெங்காயம் - 1 கைப்பிடி,
பூண்டு பற்கள் ------ 6,
தக்காளி ------ 2,
புளி ----- சின்ன எலுமிச்சை அளவு
மிளகாய்த்தூள் --- 3/4. டீஸ்பூன்,
மல்லித்தூள் ------ 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் ---- 1/2 டீஸ்பூன்,
கெட்டித்தயிர் ------ 1 டேபிள்ஸ்பூன்,
உப்பு,எண்ணெய் --- தேவைக்கு,
தாளிக்க: கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை
செய்முறை :
நன்கு அலசி நீர் வடித்த சுண்டைக்காயை மஞ்சள் தூள் ,உப்பு சேர்த்து எண்ணெய் விட்டு வதக்கி வைக்கவும். உரித்த வெங்காயம், பூண்டு பற்கள் தக்காளி துண்டுகளை மிக்ஸி ஜாரில் நீர் சேர்க்காமல் ஒன்றிரண்டாகச் சுற்றி எடுத்து, வாணலியில் எண்ணெய் காயவைத்து, கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, பொடித்த கலவை சேர்த்து நன்கு வாசம் வர வதக்கி சுருளும் போது வதங்கிய சுண்டைக்காயோடு சேர்த்து புளி நீர் விட்டு மிளகாய்த்தூள் ,மல்லித்தூள், 1/2 ஸ்பூன் சீரகத்தூள்,மல்லித்தழை ,போதுமான நீர் சேர்த்துக் கொதிக்கும் போது, ஒரு டீஸ்பூன் வெல்லத்தூள், தயிர் சேர்த்து, குழம்பு நல்ல நிறமும், மணமுமாகத் திக்காகி, எண்ணெய் பிரியும் போது இறக்கி சூடான சாதத்தோடு பிசைந்து சாப்பிட மிகுந்த சுவையாக இருக்கும்.
வித்தியாசமான பக்குவத்தில் அசத்தும் காரக்குழம்பு.