திங்கள், 2 செப்டம்பர், 2013

புளியோதரை


தேவையானவை:
பச்சரிசி-1 கப்,
புளி- 1 பெரிய எலுமிச்சை பழம் அளவு
நல்லெண்ணெய்-1 டேபிள் ஸ்பூன்
கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு-1 டேபிஸ் ஸ்பூன்
கட்டிப்பெருங்காயம்-சின்ன துண்டு
வர மிளகாய்-5
கறிவேப்பிலை-சிறிதளவு
உப்பு- தேவையான அளவு
மஞ்சள் பொடி-1/4 டீஸ்பூன்
தோல் நீக்கிய வறுத்த வேர்க்கடலை-1/4 கப்



வறுத்து பொடிக்க:
வெந்தயம்-1டீஸ்பூன்
கடுகு-1/2 டீஸ்பூன்
தனியா-1 டீஸ்பூன்
வரமிளகாய்-1( காரம் அதிகம் வேண்டாமென்றால் மிளகாயை நீக்கிவிடலாம்)
இவை அனைத்தும் வறுத்துப் பொடித்து புளியோதரைப் பொடியாக்க வேண்டும்.

செய்முறை:
புளியை ஊற வைத்து வடிக்கட்டி கொள்ளவும். வாணலியில்  நல்லெண்ணெய் விட்டு கடுகு, உளுந்தம்பருப்பு,கடலைப்பருப்பு, வரமிளகாய், கறிவேப்பிலை தாளித்து பின் அத்தோடு புளிக்கரைசலை சேர்க்கவும். மஞ்சள் பொடி , உப்பு போடவும். பெருங்காயத்தை வறுத்து பொடி பண்ணி போட்டு அடிக்கடி கிளறி விடவும். நன்கு கொதித்து திக்காகி எண்ணெய் சிகப்பு நிறத்தில் கொப்பளிக்கும் போது புளியோதரைப்பொடி சேர்த்து கிளறி இறக்கவும்.இதனுடன் வேர்க்கடலை சேர்த்து கிளறவும்.
ஒரு கப் அரிசியுடன் இரண்டரை கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் சாதமாக்கி இறக்கவும். சாதத்தை பொல பொலப்பாக உதிர்த்து விட்டு புளிக்காய்ச்சல் சேர்த்து கிளறவும். இதற்கு தொட்டுக்கொள்ள துவையல்கள், வறுவல்கள், காரக்கறிகள், கூட்டு , அப்பளம் இவை எல்லாம் பொருத்தமாக இருக்கும்.

1 கருத்து: