திங்கள், 2 செப்டம்பர், 2013

சிகப்பரிசி புட்டு


தேவையானவை:
சிகப்பரிசி-1 கப்
கடலைப்பருப்பு- ½ கப்
வெல்லம்-250 கிராம்
ஏலக்காய்-5
நெய்-25 கிராம்
முந்திரி, திராட்சை – தலா 25 கிராம்



செய்முறை:
சிகப்பரிசியை வெறும் வாணலியில் சிவக்க வறுத்து ஆற வைத்து மிக்ஸியில் நைசான மாவாக அரைத்து ஒரு சிட்டிகை உப்பு கலந்த நீரில் பிசிறி பிசைந்து கட்டிகளின்றி உதிரியாக அழுத்தி ஒரு மணி நேரம் மூடி வைக்கவும். கடலைபருப்பை பாத்திரத்தில் கொதிக்கும் தண்ணீரில் போட்டு குழைந்துவிடாமல் மலர வேக வைத்து இறக்கி நீர் வடித்து ஆறிய பின் மிக்ஸியில் பொடிக்கவும்.
சிகப்பரிசி மாவுடன் விரும்பினால் இரண்டு டேபிள் ஸ்பூன் தேங்காய்ப்பூ சேர்த்து ஆவியில் வேக விடவும். இன்னொரு பர்னரில் கொதி நீரில் கரைத்து வடிகட்டிய வெல்ல நீரைப்பாகு வைக்கவும். பாகு முதிர்ந்து வரும் போது கடலைப்பருப்பு பொடி , ஏலப்பொடி சேர்த்து கிளறி பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும் போது இறக்கவும்.
வெந்த புட்டை இறக்கி அகலமான பாத்திரத்தில் கொட்டி நெய் சேர்த்து கிளறி , வெல்லம் பருப்பு கலவை சேர்த்து மசித்து கிளறவும். நெய்யில் வறுத்த திராட்சை முந்திரி சேர்த்து கிளறி பரிமாறவும்.

1 கருத்து: