வியாழன், 17 அக்டோபர், 2013

உளுந்தங்கொழுக்கட்டை

உளுந்தங்கொழுக்கட்டை





தேவையானவை:
 மாவுப்பச்சரிசி -1 கப்
வெள்ளை உளுந்தம் பருப்பு -1/2 கப்
பச்சை மிளகாய்-2
பெருங்காய பவுடர்-1/4 டீஸ்பூன்
மல்லித்தழை சிறிதளவு
உப்பு, எண்ணெய்- தேவைக்கேற்ப

தாளிக்க:
கடுகு, உளுத்தம்பருப்பு- தலா ¼ டீஸ்பூன்
மிளகாய் வற்றல்-2

செய்முறை:
அரிசியை கொழுக்கட்டை மாவாக்கவும்.உளுந்தம் பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்து முற்றுமாக தண்ணீர் வடித்து பச்சை மிளகாய், உப்பு, பெருங்காய பவுடர், சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸியில் பொடிக்கவும்.சிறு உருண்டைகளாக்கி இட்லி தட்டில் வைத்து ஆவியில் வேக வைத்து எடுத்து உதிர்த்து விடவும்.
வாணலியில் எண்ணெய் காய வைத்து கடுகு , உளுத்தம்பருப்புடன், மிளகாய் வற்றலின் விதைகளை மட்டும் உதிர்த்து போட்டு தாளித்து  தேங்காய் பூ சேர்த்து வறுத்த உளுத்தம் பருப்பு மாவில் கலக்கவும்.மல்லித்தழை பொடியாக நறுக்கி போடவும்.
மாவை எண்ணெய் தடவிய வாழை இலையில் தட்டி உளுத்தம் பருப்பு கலவையை நடுவில் வைத்து மூடி ஓரங்களை இணைத்து ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக