மாப்பிள்ளை சம்பா கிச்சடி
***************************************************************************
தேவை :
---------------------
மாப்பிள்ளை சம்பா (சிகப்பு) அரிசி ---- 1 கப் ,
பீட்ரூட், கேரட், பீன்ஸ், குடமிளகாய், பச்சைப்பட்டாணி போன்ற காய்கள் ---- தலா சிறிது (எல்லாமாக 200 கிராம் அளவில்) தக்காளி -- 1 , பெரிய வெங்காயம் -சின்னதாக 1, பச்சை மிளகாய் --- 3 ,மல்லி, புதினா - -தலா சிறிது,
எண்ணெய், உப்பு, கடுகு, உளுந்தம் பருப்பு - தேவைக்கு,
நெய் - 1 டேபிள்ஸ்பூன். -----------------------------------------------
செய்முறை --------------------- மாப்பிளை சம்பா அரிசியை வெறும் வாணலியில் வறுத்து, மிக்ஸியில் ஒன்றிரண்டாகப் பொடித்து, 3 1/2 கப் நீர் சேர்த்து குக்கரில் போட்டு 1 மணிநேரம் ஊறியபின் சிறிது உப்பு போட்டுக் கிளறி அடுப்பில் வைத்து மூடி வெயிட் போட்டு ஒரு பிரஷர் வந்ததும், அடுப்பைக் குறைத்து, மூன்று நிமிடங்கள் பொலிய விட்டு அடுப்பை அணைக்கவும். குக்கரில் அரிசி வெந்து கொண்டிருக்கும் போதே இன்னொரு பர்னரில் வாணலியில் எண்ணெய் காயவைத்து கடுகு,உளுந்தம் பருப்பு தாளித்து, பச்சை மிளகாய், தக்காளித் துண்டுகள், மெலிதாக நறுக்கிய வெங்காயம், விரும்பினால் 1 டீஸ்பூன் இஞ்சித் துருவல் சேர்த்து வதக்கி ,புதினா , மல்லி சேர்த்து நன்கு பொன்னிறமாக வதங்கியதும் துண்டுகளாக நறுக்கிய காய்கறிகள் சேர்த்துப் புரட்டி நீரும் உப்பும் சேர்த்து வெந்து நீர் வற்றியதும், குக்கரில் வெந்திருக்கும் அரிசிக் கலவையைச் சேர்த்து நெய்விட்டு நன்கு கிளறி பொலபொலப்பாக இறக்கவும்.
மிகச் சிறப்பான, சத்தும், சுவையும் நிறைய காலை மற்றும் இரவு நேர உணவு. அனைவருக்கும் ஏற்ற நார்ச்சத்து, புரதம், தாதுப் பொருட்கள் நிரம்பியது. சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் உகந்தது.
Super amma! Looking good!
பதிலளிநீக்குஅருமையான ரெசிபி
பதிலளிநீக்குஆமாம் தம்பி மகிழ்ச்சி. பீட்ரூட் கலர் அனைத்தையும் சிகப்பாக்கி அழகாக்கிடுத்து
பதிலளிநீக்குமிக்க மகிழ்ச்சிங்க.தொடர்ந்து ஆதரவு கொடுங்க
பதிலளிநீக்கு