செவ்வாய், 27 மே, 2014

கேரட் சுய்யம்

கேரட்  சுய்யம் 


தேவையானவை;

           கடலைப்பருப்பு- 1 கப், பெரிய  கேரட்- 2;

           பொடித்த  வெல்லம்- 3/4 கப்,

          தேங்காய்ப்பூ- 1 டேபிள்ஸ்பூன்,

        மைதா- 1 கப்,  அரிசிமாவு- 1/4 கப்,

         ஏலக்காய்- 5, 

          உப்பு, எண்ணெய்- தேவைக்கு,

  
செய்முறை;
  
      கடலைப்பருப்பை  மூழ்கும்  அளவுக்கு  மேல்  நீர்  விட்டு  குழையாமல்  மலர  வேகவிட்டு  நீர்  வடித்து  உலர்த்தியபின்  மிக்ஸியில்  தூளாகப் பொடிக்கவும். கொதித்த  நீரில்  கரைத்து  வடிகட்டிய  வெல்லநீருடன்  கேரட்  துருவல்  தேங்காய்ப்பூ, ஏலப்பொடி  சேர்த்து  அடுப்பில்  வைத்துக்  கிளறவும். எல்லாம்  ஒன்றாகித்  திரண்டு  வரும்போது  கடலைப் பருப்புப்  பொடி  சேர்த்துக்  பாத்திரத்தில்  ஒட்டாத  நிலை  வந்ததும்  இறக்கவும்.

       மைதாமாவு, அரிசிமாவு  இரண்டையும்  ஒன்றாக்கி  உப்பும்  நீரும  சேர்த்துத்  தோசைமாவு  பதத்திற்குக்  கரைக்கவும். வாணலியில்  எண்ணெய் காயவைத்து  கடலைப் பருப்பு , கேரட்  பூர்ணதைச்  சிறு  உருண்டைகளாக  எடுத்துக்  கரைத்த  மாவில்  தோய்த்துப்  போட்டு  மிதமான  தணலில்  நிதானமாகத்  திருப்பிப்  போட்டு  வேகவைத்து  எடுக்கவும்.

            சுவை  மிகுந்த  இந்தப்  பதார்த்தத்தைத்  தயாரிப்பதும்  எளிதுதான்.  
                           வைக்கவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக