வரகு ஆப்பம் + தேங்காய்ச் சட்னி
தேவையானவை;
வரகு அரிசி- 1 கப் , புழுங்கலரிசி- 1/2 க ப் ,
வெள்ளை உளுந்தம் பருப்பு- 1 டேபிள்ஸ்பூன்,
வெந்தயம்- 1 டீஸ்பூன், தேங்காய்- 1 மூடி,
உப்பு, எண்ணெய்- தேவைக்கு
சட்னிக்குத் தேவையானவை-
தேங்காய்- 1 மூடி, பொட்டுக் கடலை- 2 டேபிள்ஸ்பூன்,
பச்சைமிளகாய்- 4, சின்னவெங்காயம்- 6
கடுகு, உளுந்தம்பருப்பு- தலா 1/4 டீஸ்பூன்,
கறிவேப்பிலை- சிறிது,
செய்முறை
புழுங்கலரிசி, உளுந்தம்பருப்பு, வெந்தயம் ஆகியவற்றை ஒன்றாக ஊறவைக்கவும். வரகைத் தனியாக ஊறவைக்கவும். ஊறிய புழுங்கலரிசி கல வையைத் தேங்காய், உப்பு சேர்த்து நீர் விட்டு அரைக்கவும். முக்கால் பதம் மசிந்ததும் வரகு அரிசி சேர்த்து தோசைமாவு பதத்துக்கு அரைத்து எடுத்து நான்குமணி நேரம் புளிக்க வைத்தபின் நீர்விட்டுக் கரைத்து காய்ந்த ஆப்பச்சட்டியில் சுற்றிச் சுழற்றி ஊற்றி மூடி போட்டு வேகவைத்து எடுத்துத் தேங்காய்ச் சட்னியுடன் பரிமாறவும்.
தேங்காய்ப்பூ , பொட்டுக்கடலை, பச்சைமிளகாய், இஞ்சி, உப்பு சேர்த்து நீர்விட்டுச் சட்னியாக அரைத்து எடுக்கவும். காய்ந்த எண்ணெயில் கடுகு , உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை தாளித்து பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கிச் சட்னியில் கொட்டிக் கிளறி விடவும். சுவைமிக்க மேலும் சுவையாக்கும் இந்த வித்தியாசச் சட்னி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக