பருப்புத் துவையல்
தேவையானவை;
துவரம்பருப்பு- 2/2 கப்,
தேங்காய்ப் பூ- 1 டேபிள்ஸ்பூன்,
பச்சைமிளகாய்- 4,
பூண்டுபல்- 4, உப்பு,
எண்ணெய்- தேவைக்கு.
செய்முறை;
துவரம்பருப்பை சிறிது எண்ணெய் விட்டுச் சிவக்க வறுத்து, ஆறவைத்து
நைசாகப் பொடிக்கவும்.
தேங்காய்ப் பூவுடன் பச்சைமிளகாய், பூண்டுப் பல், உப்புடன் நீர் சேர்த்து
சற்று தளர்ச்சியாக அரைத்து மசிந்ததும் பருப்புப் பொடியையும் சேர்த்துச் சுற்றவும்.
கெட்டியாக இருந்தால் சிறிது நீர் சேர்த்துக் கொள்ளலாம். ஒன்றானதும் எடுக்கவும்.
இந்தத் துவையலை சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம்.காரக்குழம்புகள்
மிளகுரசத்துடன் தொட்டுக் கொள்ளலாம். புளியோதரைக்கு, இந்தத் துவையல் மிகவும்
பொருத்த மானது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக