வாழைத்தண்டு பால்கூட்டு
தேவையானவை;
நார் நீக்கிப் பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு - 1கப்,
பாசிபருப்பு- 1/4 கப்,
பச்சைமிளகாய்-4,
தேங்காய்ப்பூ- 4 டேபிள் ஸ்பூன்,
மஞ்சள்பொடி- 1/2டீஸ்பூன்,
சீரகப்பொடி- 1/2 டீஸ்பூன்,
மல்லிதழை- சிறிது .
தாளிக்க,
கடுகு,
உளுத்தம்பருப்பு- தலா 1/4டீஸ்பூன்.
கறிவேப்பிலை- சிறிது
செய்முறை;
மோரும் ,மஞ்சள்போடியும் கலந்த நீரில் வாழைத் தண்டைப் போட்டு வைக்கவும். பாசிப்பருப்பு மூழ்கும் அளவு கொதித்த நீர் ஊற்றி மூடி வைக்கவும் .
பிரஷர் பேனில் எண்ணெய் காயவைதுத் தாளிக்கும் பொருட்கள் தாளித்து, வாழைதண்டைப் பிழிந்து போட்டு பாசிப்பருப்பை நீருடன் சேர்க்கவும். நறுக்கிய பச்சைமிளகாய், மஞ்சள் பொடி , சீரகப் பொடி ,உப்பு சேர்த்துக் கிளறி மூடி இரண்டு பிரஷர் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.தேங்காய்ப் பூவை அரைத்துப் பால் எடுக்கவும்.பிரஷர் தணிந்ததும் பேனைத் திறந்து கூட்டைக் கிளறிவிட்டு தேங்காய்ப்பால் சேர்த்துக் கிளறிப் பொங்கியதும் இறக்கவும். 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு விட்டு, மல்லிதழை தூவிப் பரிமாறவும்.
இந்தச் சுவை மிகுந்த கூட்டைச் சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக