முளைப்பயறு அடை
தேவையானவை;
முளைகட்டிய பயத்தம் பயறு -1கப் ,
புழுங்கலரிசி- 1/2 கப்
பச்சரிசி- 1/4 கப்
பச்சைமிளகாய்- 4,
இஞ்சி- சின்னத்துண்டு,
சோம்பு அல்லது சீரகம்-1டீஸ்பூன்,
பெரியவெங்காயம்- சின்ன தாக - 1,
கறிவேப்பிலை, மல்லிதழை- தலா - சிறிது,
எண்ணெய், உப்பு- தேவைக்கு.
செய்முறை;
பச்சரிசி, புழுங்கலரிசியை ஒன்றாக ஊறவைத்து , பச்சைமிளகாய், இஞ்சி, சோம்பு
அல்லது சீரகம், உப்பு சேர்த்து நீர் விட்டு நைசாக அரைத்து எடுக்கவும்.
முளைப்பயிரை நீர் விடாமல் ஒன்றி ரண்டாகப் பொடிக்கவும். இத்துடன் பொடியாக
நறுக்கிய வெங்காயம், மல்லி, கறிவேப்பிலை சேர்த்து எல்லாவற்றையும் அறிசிமாவோடு
கலக்கவும். விரும்பினால் பெருங்காயப்பொடி சிறிது சேர்க்கலாம்.
தோசைக் கல்லைக் காயவைத்து, வட்டமாக ஊற்றி சுற்றிலும் எண்ணெய் விட்டு
வேகவைத்துத் திருப்பிப் போட்டு முறுகலாக வேகவைத்து எடுக்கவும்.
இதற்கு தேங்காய் சட்னி , தக்காளி சட்னி , வெல்லம் தொட்டுக் கொள்ளலாம்.
இட்லிப் பொடியும் நன்றாகவே இருக்கும்.
அம்மா, இது ஆந்திரா ஸ்பெஷல். பேரு "பெசரட்டு"!
பதிலளிநீக்குSuperb Amma
பதிலளிநீக்கு