மாம்பழக் குழம்பு
------------------------
தேவை
-------------
சின்ன சைஸ் மாம்பழம் - 4 ,
துவரம் பருப்பு - 1/4 கப்,
புளி --- சின்ன எலுமிச்சை அளவு,
சாம்பார் பொடி - 2 டீஸ்பூன்,
சின்ன வெங்காயம் - 1 கைப்பிடி,
தக்காளி -- 2, பச்சை மிளகாய் - 4,
கறிவடகம் --- பெரிய சைஸ் 2
உப்பு, எண்ணெய் --தேவைக்கு
செய்முறை
---------------------
துவரம்பருப்பை மஞ்சள் பொடி போட்டு கரைய வேகவிடவும்.
வாணலியில் நல்லெண்ணெய் காயவைத்து, கறி வடகம் உதிர்த்துப் போட்டு பொரிந்ததும் எடுத்து வைக்கவும். அதே வாணலியில் நாலு கறிவேப்பிலை எண்ணெயில் தாளித்து தக்காளித் துண்டுகள் உரித்த வெங்காயம் கீறிய பச்சை மிளகாய், சேர்த்து நன்கு வதங்கியபின் புளி கரைத்த நீர் விட்டு சாம்பார்பொடி உப்பு சேர்க்கவும். 1/2 டீஸ்பூன் பெருங்காயத் தூள் சேர்த்துக் கொதித்ததும் கொத்துமல்லி இலை துவரம்பருப்பு சேர்த்து கொதித்ததும் குழம்பு சற்று லூசாக இருக்கும் நிலையிலேயே மாம்பழங்களைப் போட்டு ஒரு நிமிடம் கொதித்ததும் பொரித்த கறிவடகம் தூவி இறக்கி, சூடான சாதத்தோடு பரிமாறவும்.
சுவையில் அசத்தும் இந்த வித்தியாசக் குழம்பு!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக