திருநெல்வேலி அல்வா
---------------------------------------
தேவை
--------------
சம்பா கோதுமை ---- 1 கப் ( 200 கிராம்)
சர்க்கரை ------ 3 கப் ( 600 கிராம்)
நெய் --- ( 600 கிராம்)
ஏலக்காய் -- 6
முந்திரிபருப்பு ---- 20 கிராம்.
செய்முறை
---------------------
கோதுமையை எட்டு மணி நேரம் நீரில் ஊறவிட்டு, நீர் விட்டு அரைத்து வடிகட்டி, பாலெடுத்து , 5 மணி நேரம் தெளியவிட்டு, தெளிந்த நீரை இறுத்து விட்டு, அடியில் கெட்டித்திருக்கும் பாலுடன் 4 கப் நீர் சேர்த்து கலக்கவும்.
வாணலியில் நெய் விட்டு முந்திரியை வறுத்தெடுத்த பின் அந்த வாணலியிலேயே மாவை ஊற்றி கிண்டவும் . மாவு ஜெல் போல திரளும் போது 2 1/2 கப் சர்க்கரை போடவும். 1/2 கப் சர்க்கரையை ஒரு சிறிய பேனில் போட்டு சிறிது நெய் ஊற்றி கிண்டி கலர் திரவமாக வந்ததும் மாவு கலவையில் ஊற்றவும். இன்னொரு அடுப்பில் தண்ணீர் கொதித்தபடி இருக்கட்டும்.
மாவு வேக வேக இடையிடையே கொதிக்கும் சிறிது சிறிதாகச் சேர்க்கவும். நெய் சிறிது சிறிதாகச் சேர்க்கவும். எல்லா நெய்யையும் ஊற்றி விடவும். நாலு கப் அளவு தண்ணீர் ஊற்றியதும் நிறுத்தி விடவும். ஏலப்பொடி சேர்த்து கை விடாமல் பாத்திரத்தில் ஒட்டாமல் சுருளும் போதும் கிளறுவதை நிறுத்தாமல் நெய் பிரிந்தபின் முந்திரி தூவி இறக்கவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக