சனி, 1 மார்ச், 2014

குதிரைவாலி காராமணி கொழுக்கட்டை

குதிரைவாலி  காராமணி  கொழுக்கட்டை 


தேவையானவை;

குதிரைவாலி அரிசி- 1 கப்,

காராமணிப்  பயறு- 1/2 க ப் ,

வெல்லம்- 1/4 கிலோ,

தேங்காய்- 1 மூடி,

ஏலக்காய், 6,

செய்முறை;

குதிரைவாலி  அரிசியைக்  களைந்து  உடனே  முற்றுமாக  நீரை  வடித்து  நமக்கவிட்டு  சற்றுக் 

குருனையாகப்  பொடிக்கவும். நான்கு  மணி  நேரம்  ஊறிய  காராமணிப்  பயறை  மூழ்கும் வரை 

நீரில்  போட்டுக்  குழையாமல்  மலர  வேகவிட்டு  எடுத்து  ஒன்றிரண்டாகப்  பொடித்து  வைக்கவும்.

தேங்காயை  மெல்லிய  சிறு  துண்டு களாக்கவும்  அல்லது  துருவவும்.

       வெல்லத்தைக்  கொதிக்கும்  நீரில்  கரைத்து  வடிகட்டி  தேங்காயுடன்  சேர்த்துப்  பாகு  வைக்கவும்.

ஏலப்பொடி, காராமணிப்  பொடி  சேர்த்துக்  கிளறி  பாத்திரத்தில்  ஒட்டாத  நிலை  வந்ததும்  இறக்கி  

குதிரைவாலி  மாவுடன்  சேர்த்துக்  கிளறி  உள்ளங்கையில்  மாவை  வைத்து   நீளமாகவோ, உருண்டையாகவோ 

பிடித்து  துணி போட்ட  இட்லித்   தட்டில்  வைத்து  ஆவியில்  வேகவிட்டு  எடுக்கவும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக