குதிரைவாலி காராமணி புட்டு
குதிரைவாலி அரிசி 1 கப் ,
காராமணிப் பயறு- 1/4 கப்,
வெல்லம்- 200 கிராம்,
தேங்காய்ப்பூ- 2 டீஸ்பூன்,
நெய்* 25 கிராம்,
ஏலக்காய்- 5
செய்முறை;
குதிரைவாலி அரிசியை வெறும் வாணலியில் சிவக்க வறுத்து நைசாகப் பொடித்து
சிட்டிகை உப்பு கலந்த நீர் விட்டுப் பிசிறிப் பிசைந்து கட்டிகளின்றி உதிரியாக அழுத்தி
மூடிவைக்கவும்.
சுமார் நாலு மணி நேரம் ஊறிய காராமணிப் பயறை மூழ்கும் வரை நீரில் போட்டுக்
குழையாமல் மலர வெந்ததும் இறக்கி நீர்வடித்து உலரவிட்டபின் மிக்சியில் ஒன்றிரண்டாகப்
பொடிக்கவும். கொதிக்கும் நீரில் வெல்லத்தைக் கரைத்து வடிகட்டிப் பாகுவைக்கவும்.
இன்னொரு பர்னரில் குதிரைவாலி மாவை ஆவியில் புட்டாகத் தேங்காய்ப்பூ சேர்த்து வேக
வைத்து எடுத்து முதிர்ந்த பாகு ஏலப்பொடி நெய் சேர்த்துக் கிளறவும். விரும்பினால் திராட்சை,
முந்திரி நெய்யில் வறுத்துப் போட்டுக் கிளறிப் பரிமாறவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக