ஞாயிறு, 2 மார்ச், 2014

வாழைப்பூ கோலா

 வாழைப்பூ  கோலா


தேவையானவை;

   ஆய்ந்து  பொடியாக  நறுக்கிய  வாழைப்பூ- 2 கப்,

    கடலைப் பருப்பு , துவரம்பருப்பு- தலா  1/2 கப்,

 பாசிப்பருப்பு- 1/4 கப்,

  பொட்டுக்கடலை  மாவு- 1/2 கப்,

  பொடியாக  நறுக்கிய  வெங்காயம்- 1/2 கப் 

 பொடியாக  நறுக்கிய  புதினா, மல்லி- 1/2 கப்,

 மிளகாய்  வற்றல்- 5,

பெருங்காயப்  பவுடர்- 1/2 டீஸ்பூன்,

சோம்பு- 1 டீஸ்பூன்,

உப்பு, எண்ணெய்- தேவைக்கு 

செய்முறை;

கடலைப் பருப்பு, துவரம்பருப்பு, பாசிப்பருப்பு  ஆகியவற்றை  ஓன்றாக  ஊறவைக்கவும்.

அரைமணி  நேரம்  ஊறிய  பின்  நீர்  வடித்து  வைக்கவும். 

    மிக்சியில்  மிளகாய், சோம்பு, பெருங்காயம் , உப்பு  ஆகியவற்றை  நீர்  விடாமல்  பொடித்தபின் 

பருப்பு வகைகளைச்  சேர்த்து  நீர்  விடாமல்  சற்றுக்  கொரகொரப்பாக  அரைத்து  எடுத்து  வாழைப்பூ,

 வெங்காயம், புதினா , மல்லி  சேர்த்துப்  பிசையவும். இறுதியாகப்  பொட்டுக்கடலை  மாவைச்  சேர்த்துப் 

 சிறு  உருண்டைகளாக  உருட்டிக்  காய்ந்த  எண்ணெயில்  கொஞ்சம், கொஞ்சமாகப்  மிதமான  தணலில் 

திருப்பிப்  போட்டு  முறுகலாக  வேகவிட்டு  எடுக்கவும்.

       இந்த  ருசிமிக்க  கோலா  உருண்டையை  மதிய  உணவோடும், மாலை  நேரச்  சிற்றுண்டியாகவும் 
 
 சாப்பிடலாம்.        

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக