முருங்கைக்காய் குருமா
தேவையானவை;
முருங்கைக்காய் - 3,
பெரிய வெங்காயம்- 1
தக்காளி- 2,
பச்சை மிளகாய்- 4
சோம்பு- 1 டீஸ்பூன்,
கசகசா- 1/2 டீஸ்பூன்,
இஞ்சி- சின்னதுண்டு,
பூண்டு- 5 பல்,
முழு முந்திரிப் பருப்பு- 5
மல்லி, புதினா- தலா சிறிது
உப்பு, எண்ணெய்- தேவைக்கு,
தாளிக்க;
பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ இதழ், ஏலக்காய் ,
பிரிஞ்சி இலை- தலா 2 கறிவேப்பிலை- சிறிது
செய்முறை
இரண்டு டேபிள்ஸ்பூன் தேங்காய்ப் பூவுடன் பச்சைமிளகாய், இஞ்சி, சோம்பு,
கசகசா, பூண்டு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து நீர் விட்டு நைசாக அரைக்கவும்.
வாணலியில் எண்ணெய்விட்டுத் தாளிக்கும் பொருட்கள் தாளித்துப் பொடியாக
நறுக்கிய தக்காளி, வெங்காயம், புதினா சேர்த்துப் பொன்னிறமாக வதக்கியபின் அரைத்த
விழுது, முருங்கைக்காய்த் துண்டுகள் சேர்த்துக் கிளறி உப்பு, நீர் சேர்த்துக் கொதிக்கவிடவும்.
முருங்கைக்காய் வெந்து நல்ல மணத்துடன் குருமா கொதிக்கும்போது பாலில் ஊறிய முந்திரிப்
பருப்பை அரைத்துச் சேர்த்துக் கொதித்ததும் இறக்கி எலுமிச்சைச் சாறு சேர்த்து , மல்லித்தழை
தூவிக் கிளறிப் பரிமாறவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக