தினை கேரட் உருண்டை
தேவையானவை;
தினை- 1 கப்,
கேரட் துருவல்- 1 கப்,
பொடித்த வெல்லம்- 3/ 4 கப்,
தேங்காய்ப்பூ- 2 டேபிள் ஸ்பூன்,
ஏலக்காய்- 5
செய்முறை;
தினையைக் களைந்து நீரை முற்றுமாக வடித்து மூடி வைக்கவும். ஒரு மணி நைசான ரவையாகப் பொடிக்கவும்.கேரட் துருவலை நீர் சேர்த்து இரண்டு நிமிடம் வேகவிட்டபின் வெல்லம், தேங்காய்ப்பூ, ஏலப்பொடி சேர்த்தக் கிளறவும். நீர் வற்றியபின் இறக்கி தினை ரவையில் சேர்த்துப் பிசைந்து எலுமிச்சை அளவு உருண்டைகளாகப் பிடித்து துணி இட்லிதட்டில் ஒன்றின் மீது ஒன்று படாமல் வைத்து ஆவியில் வேகவைத்து
எடுக்கவும்.
நல்ல சத்தும் சுவையும் கொண்ட இந்த உருண்டையை மாலை நேரச் சிற்றுண்டியாக அனைவரும் சாப்பிடலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக