கோகனட் மில்க் வீட் புலவு
கோகனட் மில்க் வீட் புலவு
தேவையானவை;
கோதுமைக்குருணை- 1 கப் ,
முற்றிய தேங்காய்- 1,
பூண்டு- 6 பல்,
பச்சை மிளகாய்- 4,
சீரகப்பொடி- 1 டீஸ்பூன்,
முந்திரிப் பருப்பு 50 கிராம்,
நெய்- 50 கிராம்,
எலுமிச்சை- 1 சின்ன பழம்,
மல்லி, புதினா- தலா சிறிது,
உப்பு, எண்ணெய்- தேவைக்கு,
தாளிக்க;
கிராம்பு, பட்டை, அன்னாசிப்பூ இதழ் , ஏலக்காய்,
பிரிஞ்சி இலை- தலா 2,
செய்முறை;
தேங்காயை அரைத்து மூன்று கப் பால் எடுக்கவும். கோதுமைக் குருணையை
நெய் விட்டு வறுத்துத் தேங்காய்ப் பாலுடன் குக்கரில் போட்டு மூடி வைத்து
ஊறவிடவும். அடுப்பில் வைக்க வேண்டாம்.
வாணலியில் எண்ணெய் காய வைத்துத் தாளிக்கும் பொருட்கள் தாளித்து
நறுக்கிய பூண்டு பற்கள் , கீறிய பச்சை மிளகாய் சேர்த்து மிதமான தணலில் லேசாக
வதக்கி அரிசி, தேங்காய்ப்பால் கலவையில் சேர்த்து அடுப்பில் வைக்கவும். சீரகப்பொடி
உப்பு , மல்லி , புதினா சேர்த்துக் கிளறிக் கொதித்ததும் மூடி வெயிட் போடவும். ஒரு
பிரஷர் வந்ததும் மூன்று நிமிடம் அடுப்பை சிம்மில் வைத்து அணைக்கவும்.
பிரஷர் தணிந்ததும் திறந்து அடுப்பில் வைத்து மிதமான தணலில் கிளறி
எலுமிச்சைச் சாறு, நெய், நெய்யில் வறுத்த முந்திரிப் பருப்பு சேர்த்துக் கிளறி மல்லித்
தழை தூவிப் பரிமாறவும்.
இந்தச் சுவையான புலவிற்கு காரக்கறிகள், சிப்ஸ், மற்றும் சிக்கன் வறுவல் ,
மட்டன் வறுவல் போன்றவை பொருத்தமான சைட் டிஷ்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக