தினை பருப்பு அடை
தேவையானவை;
தினை- 1 கப் ,
துவரம்பருப்பு, கடலைப்பருப்பு,
பாசிப்பருப்பு- தலா 1/4 கப்,
மிளகாய் வற்றல்- 4,
சீரகம்- 1 டீஸ்பூன்,
பெருங்காயப் பொடி - 1/2 டீஸ்பூன்,
பெரிய வெங்காயம்- 1,
கறிவேப்பிலை- சிறிது,
மல்லிதழை- சிறிது,
உப்பு, எண்ணெய்- தேவைக்கு,
செய்முறை;
திணையைத் தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊறவிடவும். துவரம்பருப்பு, கடலைப் பருப்பு,
பாசிப்பருப்பு , மிளகாய்வற்றல் நான்கு சீரகம், பெருங்காயப்பொடி உப்பு சேர்த்துக் கொகொரப்பாகப் பொடிக்கவும். ஊறிய தினையை நீர் வடித்து நைசான மாவாகச் சிறிது நீர் சேர்த்து அரைக்கவும்.இந்த மாவுடன் பருப்புப் பொடிகளைச் சேர்க்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயம் மல்லித் தழை சேர்க்கவும். கறிவேப்பிலையைக் கிள்ளிப்போட்டுக் கிளறிக் காய்ந்த தோசைக்கல்லில் அடைகளாக ஊற்றிச் சுற்றிலும் எண்ணெய் விட்டுத் திருப்பிப் போட்டு முறுகலாக வேகவிட்டு எடுக்கவும்.நார்ச்சத்து மிகுந்த இந்த அடைக்கு வெண்ணெய், வெல்லம் ஸ்பெஷல் சைட் டிஷ். தேங்காய்
சட்னியும் நன்றாக இருக்கும். எதுவும் தொட்டுக் கொள்ளாமலும் சுவையாகவே இருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக