திங்கள், 7 ஏப்ரல், 2014

பனீர் வெஜ் குருமா

பனீர்  வெஜ்  குருமா


தேவையானவை;

முருங்கைக்காய், உருளைக்கழங்கு, கேரட்,

குடமிளகாய்,- தலா  சில  துண்டுகள்,

உரித்த  பச்சைப்பட்டாணி- 1/2 கப்,

சிறுதுண்டுகளாக  பனீர்- 50  கிராம்,

தக்காளி- 2, 

பெரியவெங்காயம்  1,

பச்சைமிளகாய்- 4,

இஞ்சி- சின்னதுண்டு,

பூண்டு- 5 பல்,

சோம்பு, கசகசா- தலா  1 டீஸ்பூன்,

முழு முந்திரிப்பருப்பு-  4,

தேங்காய்-  சின்னமூடி,

மல்லி , புதினா  தலா  சிறிது,

உப்பு, எண்ணெய்- தேவைக்கு,

தாளிக்க;

பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ  இதழ், ஏலக்காய்,

பிரிஞ்சி இலை- தலா  2

செய்முறை;

   தேங்காய், பச்சை  மிளகாய், இஞ்சி, சோம்பு, கசகசா , பூண்டு  ஆகியவற்றை  நீர்விட்டு 

நைசாக அரைத்து  எடுக்கவும்.

           வாணலியில்  எண்ணெய்  விட்டுத்  தாளிக்கும்  பொருட்கள்  தாளித்தபின்  பொடியாக 

நறுக்கிய  தக்காளி, வெங்காயம்  புதினா  சேர்த்து  வதக்கவும். காய்களையும்  அரைத்த 
விழுதையும் சேர்த்துக்  கிளறி  நீரும்  உப்பும்  சேர்த்துக்  கிளறிக்  கொதிக்கவிடவும். எல்லாம் ஓன்று  சேர்ந்து  கொதித்துப் பச்சை  வாசனை  போய்  காய்களும்  நன்கு  வெந்து  குழம்பு பதத்தில்  இருக்கும்போது  பாலில்  ஊறிய முந்திரிப் பருப்பை  அரைத்துச்  சேர்க்கவும். பனீர் துண்டுகளை  சிறிது  நெய்விட்டு  மிதமான  தணலில் லேசாகவறுத்துக்  குழம்பில்  சேர்த்துக் கொதிக்கவிட்டு  இறக்கவும்.

             எலுமிச்சைச்  சாறு  சேர்த்துக்  கிளறி  மல்லிதழை  தூவிப்  பரிமாறவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக