மிதி பாகல் மசாலா குழம்பு
தேவையானவை
மிதிபாகல் காய் -1/4 கிலோ,
புளி- சின்ன எலுமிச்சையளவு,
பெரிய வெங்காயம்- 1
தக்காளி- 1,
இஞ்சி- சின்ன துண்டு,
பூண்டு- 6 பல்,
மிளகாய்ப்பொடி- 1 டீஸ்பூன்,
மல்லிப்பொடி- 1 டீஸ்பூன்,
கரம் மசாலாப்பொடி- 1 டீஸ்பூன்,
மஞ்சள்பொடி- 1/2 டீஸ்பூன்,
தேங்காய்ப்பூ- 3 டேபிள் ஸ்பூன்,
மல்லி, புதினா- தலா சிறிது,
உப்பு, எண்ணெய்- தேவைக்கு,
தாளிக்க;
பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா 2, கறிவேப்பிலை- சிறிது
செய்முறை;
பாகற்காய்களை நறுக்காமல் காம்புகளை மட்டும் ஆய்ந்து அலசியபின் மஞ்சள்பொடி, உப்புப்பொடி சேர்த்துப் பிசிறி வைக்கவும். இஞ்சி, பூண்டை ஒன்றாக விழுதாக அரைக்கவும்.
வாணலியில் எண்ணெய் காயவைத்துத் தாளிக்கும் பொருட்கள் தாளித்துப் பொடியாக நறுக்கிய தக்காளி, வெங்காயம், புதினா சேர்த்துச் சிறிது நேரம் வதக்கியபின் பாகற்காய்களைச் சேர்த்து வதக்கிப் புளி கரைத்த நீர்விடவும் மிளகாய்ப் பொடி, மல்லிப்பொடி, கரம் மசாலாப் பொடி சேர்க்கவும்.. இஞ்சி பூண்டு விழுது சேர்த்துக் கிளறிவிடவும். போதுமான நீர்விட்டுத் தேவைப்பட்டால் உப்பு போட்டுக் கைகள் வெந்து
குழம்பானதும் தேங்காய்ப்பூவை அரைத்துப் பாலை மட்டும் வடிகட்டி எடுத்துக் குழம்பில் சேர்த்துக் கிளறிக் கொதித்ததும் இறக்கி மல்லிதழை தூவிப் பரிமாறவும்.
இந்த மசாலா குழம்பைச் சாதத்தோடு பிசைந்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக