அதிரசம்
தேவையானவை;
மாவுப்பச்சரிசி- 3/4 கிலோ,
உருண்டை வெல்லம்- 1கிலோ,
ஏலக்காய்- 10,
எண்ணெய்- தேவைக்கு.
செய்முறை;
மாவுப் பச்சரிசியை 2 மணி நேரம் தண்ணீரை முற்றுமாக வடித்து வெள்ளைத்துணியில்
பரப்பி அரை மணி நேரம் உலரவிட்டபின் மெஷினில் கொடுத்து அதிரச மாவுக்கு ஏற்ற
மாதிரி அரைத்து வாங்கி வரவும் .
வெல்லத்தைக் கொதிக்கும் கரைத்து வடிகட்டிப் பாகு வைக்கவும். கல்கண்டு பதம்
எனப்படும் உருண்டைப் பதம் வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு இறக்கவும். எலப்
பொடி சேர்த்துக் கிளறியபின் மாவைச் சிறிது சிறிதாகப் போட்டு நன்கு கிளறி மூடி
வைக்கவும்.
மாவு இரண்டு நாள் ஊறியபின் மாவைபிசைந்து எலுமிச்சை அளவு மாவு
எடுத்து வாழை இலையில் தட்டிக் காய்ந்த எண்ணெயில் போட்டு மிதமான தணலில்
திருப்பிப் போட்டு வேகவைத்து எடுக்கவும்.
நமது பாரம்பரியப் பட்சணமான இது திருமணம் போன்ற விசேஷங்களிலும். பண்டிகைகளிலும்
இன்றளவும் தவறாமல் இடம் பெறுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக