தேவையானவை;
குதிரைவாலி அரிசி- 1கப்,
பாசிப்பருப்பு- 1/2 கப்,
மிளகு, சீரகம்- தலா 1/2 டீஸ்பூன்,
இஞ்சி- சின்னதுண்டு
மல்லித்தழை- சிறிது
நெய்- 25 கிராம்
செய்முறை
குதிரைவாலி அரிசி, பாசிப்பருப்பு இரண்டையும் ஒன்றாகக் குக்கரில் போட்டு உப்பும்
நீரும் சேர்த்து பிரஷரில் வைக்கவும். நாலு பிரஷர் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
சில நிமிடங்களுக்குப் பின் குக்கரை திறந்து மிளகு, சீரகத்தை நெய்யில் வறுத்துப்
போடவும். இஞ்சியைச் சிறு துண்டுகளாக்கி லேசாக நெய்யில் வதக்கிபோடவும்.
மேலும் நெய் சேர்த்துக் கிளறவும்.
முந்திரிப்பருப்பு நெய்யில் வறுத்துப் போட்டுப் பரிமாறவும். இந்தப் பொங்கலைக்
காலை உணவாக சாம்பார், தேங்காய் சட்னி , மல்லி சட்னி , புதினா சட்னி போன்றவற்றுடன்
சாப்பிடலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக