தினை தால் புட்டு
தேவையானவை;
உமி நீக்கிய தினை அரிசி- 1 கப்,
கடலைப் பருப்பு- 1/2 கப்
பொடித்த வெல்லம்- 1 கப் ,
தேங்காய்ப்பூ- 2 டேபிள்ஸ்பூன்,
ஏலக்காய்-5,
நெய்- 25 கிராம்.
செய்முறை;
தினை அரிசியை வெறும் வாணலியில் சிவக்க வறுத்து நைசான மாவாகப்
பொடித்து பிறகு சிட்டிகை உப்பு கலந்த நீர் தெளித்து பிசிறிப் பிசைந்து உதிரியாகக்
கட்டிகள் இன்றி அழுத்தி அரை மணி நேரம் மூடி வைக்கவும்.
கடலைப் பருப்பை நீர் சேர்த்துக் குழையாமல் மலர வேகவைத்து நீர் வடித்து
ஆறவைத்து மிக்ஸியில் பொடிக்கவும். கொதிக்கும் நீரில் வெல்லத்தை கரைத்து
வடிகட்டித் தேங்காய்ப் பூவுடன் பாகு வைக்கவும்.
தினை மாவை ஆவியில் புட்டாக வேகவைத்து எடுக்கவும். பாகு முதிரும் போது
கடலைப் பருப்புப் பொடியைச் சேர்த்து ஏலப்பொடி போட்டுக் கிளறி இறக்கவும்.
அடுப்பை அணைக்கவும். இந்தக் கலவையில் புட்டைக் கொட்டி உதிர்த்துவிட்டு
நெய் சேர்த்துக் கிளறிப் பரிமாறவும்.
தினை அரிசியை உமி நீக்குவது எவ்வாறு? ஏதேனும் எளிய முறை உள்ளதா? தெரிந்தால் சொல்லவும்.
பதிலளிநீக்கு