வியாழன், 26 டிசம்பர், 2013

கதம்பக் காய்க் கூட்டு

கதம்பக்  காய்க் கூட்டு 




தேவையானவை;
                       பூசனி, பரங்கி,
 அவரை,
 கத்தரிக்காய்,
 வாழைக்காய்,
கேரட்,
 சர்க்கரைவள்ளிக் கிழங்கு  போன்ற  காய்கறிகள்- தலா  சில துண்டுகள்
 துவரம்பருப்பு-1/2கப் ,
மஞ்சள்பொடி,
 மிளகாய்ப்பொடி,
 மல்லிபொடி,
சீரகப்பொடி- தலா  1/2 டீஸ்ப்பூன்,
 புளி- நெல்லிக்காயளவு,
 அரைத்த
 தேங்காய் விழுது-1 டேபிள்ஸ் பூன்,
 மல்லிதழை-சிறிதளவு,
  உப்பு,
எண்ணெய்-தேவைக்கு
 தாளிக்க;
 கடுகு,
 உளுத்தம்பருப்பு- தலா 1/4 டீஸ்பூன்,
கறிவேப்பிலை-சிறிது.

  செய்முறை;
                         துவரம்பருப்புடன்  மஞ்சள்பொடி. நீர் சேர்த்து  வேகவிடவும்.காய்களில் நீர்  மிளகாய், மல்லி, சீரகப்போடிகள்  உப்பு  சேர்த்து தனியாக  வேகவிடவும்.காய்கள் வெந்ததும்  புளித் தண்ணீர் சேர்க்கவும்.வெந்த  துவரம்பருப்பைச்  சேர்க்கவும்.தாளிக்கும்  பொருட்களைக்  காய்ந்த  எண்ணெயில்  தாளித்துக்  கொட்டவும்.தேங்காய் விழுது சேர்த்துக்  கிளறி  இறக்கவும். மல்லிதழை  தூவவும். இந்தப் பொங்கல்  விருந்துக்  கூட்டணி  இந்தக்  கூட்டு  இன்றி  சோபிக்காது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக