காராமணிப்பயறு குழம்பு
தேவையானவை:
காரமணிப்பயறு – ½ கப்
சின்ன வெங்காயம் – கைப்பிடியளவு
பூண்டு- 6 பல்
தக்காளி-1
தேங்காய்ப்பூ-1 டேபிள் ஸ்பூன்
புளி- எலுமிச்சை அளவு
மிளகாய்த்தூள்- 1 டீஸ்பூன்
மல்லித்தூள்-2 டீஸ்பூன்
மஞ்சள் தூள்-1/4 டீஸ்பூன்
மல்லித்தழை- சிறிதளவு
செய்முறை:
காரமணிப்பயிறைக் குறைந்தது நான்கு மணி நேரம் ஊறவைத்து நீர் வடித்து மூழ்கும் வரை சுத்தமான நீர் விட்டு மலர் வேக வைக்கவும். புளியை ஊறவைத்து கரைத்து சக்கை நீக்கவும். வாணலியில் எண்ணெய் காய வைத்து தாளித்து உரித்த வெங்காயம், பூண்டு பற்கள், பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து பொன்னிறமாக வதக்கி காராமணிப் பயறுடன் சேர்த்து புளி நீர் விட்டு மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், உப்பு சேர்த்து போதுமான நீர் சேர்த்து கொதிக்க விடவும்.குழம்பு பக்குவமாகி எண்ணெய் பிரியும் வேளையில் தேங்காய் விழுது சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிட்டு இறக்கி மல்லித்தழை சேர்த்து கிளறிவிடவும்.
வீட்டில் குறித்துக் கொண்டாயிற்று... நன்றி...
பதிலளிநீக்குஅம்மா பார்க்கும் போதே சாப்பிடனும் போலிருக்கே....!
பதிலளிநீக்கு