செவ்வாய், 24 டிசம்பர், 2013

மணத்தக்காளி வற்றல் குழம்பு

மணத்தக்காளி வற்றல் குழம்பு


தேவையானவை:
மணத்தக்காளி வற்றல் -1/4 கப்,
சின்ன வெங்காயம்- கைப்பிடியளவு
பூண்டு -6 பல்
புளி- ஒரு சின்ன எலுமிச்சையளவு
மிளகாய்ப்பொடி – 1 டீஸ்பூன்
மல்லிப்பொடி- 2 டீஸ்பூன்
மஞ்சள் பொடி-1/4 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய்- தேவைக்கேற்ப
மல்லித்தழை- சிறிதளவு
தக்காளி-1
தாளிக்க- கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம்- தலா ¼ டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு.


செய்முறை:

புளியை ஊற வைத்து கரைத்துச் சக்கை நீக்கவும். வாணலியில் எண்ணெய் காய வைத்து தாளிக்கும் பொருட்கள் தாளித்து, உரித்த வெங்காயம், பூண்டு பற்கள், பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்துப் பொன்னிறமாக வதங்கிய பின் புளி நீர் சேர்க்கவும். மஞ்சள் பொடி, மல்லிப்பொடி , மிளகாய்ப்பொடி, உப்பு சேர்த்து போதுமான  நீர் விட்டு கிளறி கொதிக்க விடவும்.
குழம்பில் எண்ணெய் பிரிய ஆரம்பிக்கும் போது ( விரும்பினால் இப்போது ஒரு டேபிள் ஸ்பூன் அரைத்த தேங்காய் விழுதை சேர்க்கலாம்) இன்னொரு அடுப்பில் எண்ணெய் காயவைத்து மணத்தக்காளி வற்றலை வறுத்து  கொதிக்கும் குழம்பில் கொட்டி  குழம்பை இறக்கி கிளறி விட்டு பரிமாறவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக