நாட்டுக் கோழி மசாலா
தேவையானவை:
நாட்டுக்கோழி - 1/4 கிலோ .
பெரிய வெங்காயம் -1,
பூண்டு -6பல்
இஞ்சி - சின்ன துண்டு ,
தக்காளி - 1,
புளி ,- சின்ன உருண்டை ,
மிளகாய்த் தூள் -1டீஸ்பூன் ,
ஜீரகப்பொடி - 1டீஸ்பூன்
மஞ்சள்பொடி , 1/2 டீஸ்பூன்
மிளகுப்பொடி ,1டீஸ்பூன் ,
மல்லிபொடி ,-2டீஸ்பூன் ,
பச்சைமிளகாய் -2,
கறிவேப்பிலை -சிறிதளவு ,
மல்லித் தழை - சிறிதளவு ,
எண்ணெய் , உப்பு - தேவைக்கு
தாளிக்க : ஜீரகம் - 1/2டீஸ்பூன் , பட்டை-சின்ன துண்டு ,கிராம்பு ,ஏலக்காய் -தலா - 2.
செய்முறை :
வாணலியில் எண்ணெய் விட்டு தாளிக்கும் பொருட்களைத் தாளித்து ,கறிவேப்பிலை , பொடியாக நறுக்கிய தக்காளி ,வெங்காயம் சேர்த்து சிறிது நேரம் வதக்கியபின்,நாட்டுக்கோழி யைச் சேர்த்து , மஞ்சள்பொடி போட்டு கிளறவும்.விழுதாக அரைத்த இஞ்சி பூண்டைச் சேர்த்து சில நிமிடங்கள் நன்கு வதக்கியபின் மிளகாய்ப் பொடி , மல்லிப்பொடி , ஜீரகப்போடி ,மிளகுப்பொடி, உப்பு சேர்த்துப் புரட்டிவிட்டு புளிகரைத்த நீர் விட்டு , தேவைக்கேற்ப மேலும் சிறிது நீர் சேர்த்து கிளறிவிட்டு மூடிப் பிரஷரில் வேகவிடவும். ஆறு விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும் .பிரஷர் தணிந்ததும் குக்கரைத் திறந்து விரும்பினால் இரண்டு டேபிள்ஸ்பூன் அரைத்த தேங்காய் விழுது சேர்த்துக் கொதிக்கவிட்டுக் கிளறித் திக் காக இறக்கவும். மல்லிதழை தூவிப் பரிமாறவும்.இந்த நாட்டுக்கோழி மசாலா சாதத்தோடு சாப்பிடலாம் .சப்பாத்தி,பரோட்டாவுடனும் சாப்பிடலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக