வியாழன், 5 டிசம்பர், 2013

தேங்காய்ப்பால் புலாவ்

தேங்காய்ப்பால் புலாவ்



தேவையானவை;

பச்சரிசி-2 கப்
முற்றிய தேங்காய்-1
நெய்-50 கிராம்
பூண்டு-10 பல்
இஞ்சி-சிறிதளவு
பெரிய வெங்காயம்-1
முந்திரி பருப்பு- 100 கிராம்
எலுமிச்சை பழம்- 1 மூடி
தக்காளி-2
பச்சை மிளகாய்-2

செய்முறை:

    தேங்காயை அரைத்துப் பால்  எடுக்கவும்.இஞ்சி பூண்டை விழுதாக்கவும்.வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும்.
பச்சரிசியை களைந்து நீர் வடித்து தேங்காய் பாலோடு தண்ணீர் சேர்த்து ஐந்து கப் ஊற்றி வைக்கவும்.வாணலியில் எண்ணெய், கொஞ்சம்  நெய் சேர்த்து 2 பிரிஞ்சி இலை, 2 கிராம்பு ,2 பட்டை போட்டு தாளித்து இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கி அத்துடன் பச்சை மிளகாய், தக்காளி, வெங்காயம் ,புதினா, மல்லித்தழை சேர்த்து வதக்கி எல்லாவற்றையும் தேங்காய் பாலில் ஊறிக்கொண்டிருக்கும் அரிசியுடன் சேர்த்து குக்கரில் வைக்கவும். ஒரு விசில் வந்ததும் சிம்மில்  மூன்று நிமிடம் கழித்து இறக்கி வைக்கவும்.  ப்ரஷர் இறங்கியதும் நெய்யில் வறுத்த முந்திரி துண்டுகளையும், எலுமிச்சை சாறும் சேர்த்து கிளறவும்.காரம் விரும்புபவர்கள் குக்கர் வைக்கும் போது அரிசிக்கலவையுடன் கொஞ்சம் பிரியாணி பொடி சேர்த்துக் கொள்ளலாம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக