செவ்வாய், 24 டிசம்பர், 2013

கரு வடாம் குழம்பு

                                 கரு வடாம் குழம்பு


தேவையானவை:
பெரிய நெல்லிக்காய் சைஸ் கருவடாம்-2
புளி- எலுமிச்சையளவு
பூண்டு-10 பல்
தக்காளி-1
மல்லிப்பொடி-2 டீஸ்பூன்
மிளகாய்பொடி-1டீஸ்பூன்
மஞ்சள் பொடி-1/4 டீஸ்பூன்
மல்லித்தழை- சிறிதளவு
உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப
தாளிக்க- கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம்- தலா ¼ டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு.

செய்முறை:
புளியை ஊறவைத்து கரைத்து சக்கை நீக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு தாளிக்கும் பொருட்களை தாளித்து பொடியாக நறுக்கிய தக்காளி போட்டு வதக்கவும்.பூண்டு பற்களையும் சேர்த்து மிதமான தணலில் பொங்கி விடாமல் சிறிது நேரம் வதங்கிய பின் புளித்தண்ணீர் சேர்க்கவும்.உப்பு, மஞ்சள் பொடி, மல்லிப்பொடி, மிளகாய்ப்பொடி, மல்லித்தழை போதுமான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.குழம்பு திக்காகி எண்ணெய் பிரியும் போது இன்னொரு அடுப்பில் வாணலியில் எண்ணெய் விட்டு கருவடாம்களை உடைத்துப்போட்டு  பொரிய விட்டு குழம்பில்  கொட்டி கிளறி இறக்கி வைக்கவும்.
-------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக